வேரிநாக் என்னும் இடமானது பீர்பாஞ்சால் மலைத்தொடர்களின் மீது, பானிபால் கணவாயின் அடிவாரத்தில், கடல் மட்டத்திலிருந்து 1876 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இநீரூற்றின் பெயரானது, புகழ்பெற்ற இந்து முனிவரான காஸ்யப முனிவரின் மகனான நீல நாக் என்பவரின் பெயரிலிருந்து உருவானதாக்க் கூறப்படுகிறது. இவ்விடத்தில் கட்டுமானப்பணிகள் பேரரசர் ஷாஜஹானால், தொடங்கப்பட்ட்து.
1620 ஆம் ஆண்டில், பேரரசர் ஜஹாங்கீரால், வட்ட வடிவிலிருந்த நீரூற்று, புதுப்பிக்கப்பட்டு, எண்கோண வடிவம் கொடுக்கப்பட்ட்து. இந்த நீரூற்றின் அருகாமையிலேயே, ஒரு, தோட்டத்தையும், அந்தப்புரத்தையும் மன்னர் ஷாஜஹான் கட்டினார். இந்தக் கட்டிடப்பணிக்கு கட்டுமானப் பொருள்கள் ஈரானிலிருந்து கொண்டுவரப்பட்டனவாம்.
இந்நீரூற்றிலிருந்து வெளிவரும் நீர், தெளிவாகவும், சூடாகவும் உள்ளது. இந்நீர் மருத்துவக் குணங்கள் கொண்டது என்று கூறப்படுகிறது. 15 மீட்டர் ஆழமும் 80 மீட்டர் சுற்றளவும் கொண்ட இந்நீரூற்றை சுற்றிலும், அழகிய பைன் மரம்களும் வண்ணமிகு மலர்களும் சூழ்ந்துள்ளன.
ஜீலம் நதிக்கு முதன்மை நதிமூலம் இந்த நீரூற்றுதான் எனக் கருதப்படுகிறது. இந் நீரூற்றிலிருந்து தண்ணீர் வழிந்து கீழே ஓடும் வழியில் முகலாயர்களின் குளியலறைகளும், ஓய்வெடுக்கும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.