வெள்ளை கற்களால் கட்டப்பட்டிருக்கும் காஞ்ச் மந்திர் இந்தூரில் உள்ள அழகிய கோவிலாகும். மத்திய கால விடுதியைப் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில், ஒரு விதானத்துடுன் கூடிய மாடம் மற்றும் சிக்காரா ஆகியவை உள்ளன.
இந்த கோவிலின் உள்ளே கண்ணாடிகளில் கண்கவரும் காட்சிகள் உருவாக்கப் பட்டுள்ளன. 20-ம் நூற்றாண்டில், புகழ் பெற்ற பருத்தி விற்பனையாளராக இருந்த சேத் ஹுகும்சந்த் என்பவரால் காஞ்ச் மந்திர் என்ற இந்த சமண சமயக் கோவில் கட்டப்பட்டுள்ளது.
கண்ணாடிகளில் அற்புதமான கைவேலைகள் செய்யப்பட்டுள்ள அற்புதமான கோவிலாக இது உள்ளது. கூரை, தூண்கள், தளம், கதவுகள் மற்றும் இந்த கோவிலிற்குள் இருக்கும் எல்லா இடங்களுமே கண்ணாடியாலான தகடுகள் மற்றும் மொசைக்-கினால் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், பல்வேறு வண்ணங்களாலான கண்ணாடிகளால் இந்த கோவிலின் உள்புறம் அமைக்கப் பட்டுள்ளதால் அது சிறந்த வடிவமைப்பினை கொண்டுள்ள இடமாக இருக்கும்.
கலைநயத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ள கண்ணாடி லாந்தர் விளக்குகள் மற்றும் கண்ணாடி சரவிளக்குகள் ஆகியவையும் இந்த கோவிலின் சிறப்பம்சமாக உள்ளன.
பகவான் மகாவீரர் மற்றும் பிற தீர்த்தங்கரர்களை கொண்டுள்ள இடமாக இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சமண சமய புனிதப் பயணிகள் மற்றும் பிற சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications