ஹரியானாவின் ஜஜ்ஜார் நகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள பிந்தாவாஸ் பறவைகள் சரணாலயம், இந்தியத் தலைநகரான தில்லியிலிருந்து சுமார் மூன்று மணி நேர பயணத் தொலைவில் உள்ளது.
சுமார் 1074 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த சரணாலயத்தின் முக்கிய ஈர்ப்பான வளமை பொங்கும் ஏரி, உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து 250 இனங்களை உள்ளடக்கிய, சுமார் 35,000 வகை புலம்பெயர் நீர் பறவைகளை ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.
சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த ஏரியில், மின் தடை ஏற்படும் போது மின் தூக்கி தன் இயக்கத்தை நிறுத்தி விடும் சமயங்களிலெல்லாம் ஜவஹர்லால் நேரு வாய்க்காலில் இருந்து ஒரு சுரங்கம் வழியாக வெளியேறும் நீரைத் தேக்கும் பொருட்டு, இதனைச் சுற்றி மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட 12 கி.மீ. அணையுடன் காட்சியளிக்கிறது.
ராஜஸ்தானின் உலகப்புகழ் பெற்ற பரத்பூர் பறவைகள் சரணாலயத்தின் குறைந்து வரும் நீரின் அளவினால், இந்த சரணாலயம் தற்போது அதிகமான சுற்றுச்சூழலியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. மேலும், இது பறவைகளின் பாதுகாப்பான புகலிடமாகவும் திகழ்கிறது.
இந்த விசாலமான ஏரி, கண்களுக்கு அசலான விருந்தளிப்பதாகக் காட்சியளிக்கிறது. ஏராளமான குட்டித்தீவுகளை உள்ளடக்கியுள்ள இது, பறவைகளுக்கான மிகச்சிறந்த உறைவிடமாகத் திகழ்கிறது. பிரத்யேகமான சக்தி வாய்ந்த கேமரா லென்ஸினால் மட்டுமே இந்த அழகிய நீர் பரப்பை படம் பிடிக்க இயலும்.



Click it and Unblock the Notifications