கர் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிற ஜாலாவார் கோட்டை ஜாலாவார் நகரின் மையத்திலேயே அமைந்துள்ளது. 1840 -1845ம் ஆண்டுகளில் மஹாராஜா ராணா மதன் சிங் இதைக்கட்டியுள்ளார்.
தற்சமயம் இந்த கோட்டை வளாகத்தில் மாவட்டத்தலைவர் அலுவலகம் மற்றும் பல அரசு அலுவலகங்கள்...
பீம்சாகர் அணை ஜாலாவார் நகரத்திலிருந்து 24 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. உஜட் ஆற்றின் குறுக்கே ‘மௌ போர்டா’ சிதிலங்களின் அருகே இந்த அணைப்பகுதி உள்ளது. கிச்சி சௌஹான் வம்சத்தினர் தங்கள் தலைநகராக கொண்டு ஆண்ட ஸ்தலம் இந்த மௌ போர்டா ஆகும்.
இங்கு...
ஜாலாவார் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் இந்த காக்ரான் கோட்டை அமைந்துள்ளது. 7ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டுக்குள் இது கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது மூன்று புறமும் அஹு மற்றும் காளிசிந்த் நீர்த்தேக்கங்களால் சூழப்பட்டுள்ளது.
நீர்...
ஜாலாவார் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் சந்திரபாகா ஆற்றங்கரையில் சந்திரபாகா கோயில்கள் அமைந்துள்ளன. 6ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட இக்கோயில்கள் பழங்கால சிற்ப மற்றும் கட்டிடக்கலைக்கு உதாரணங்களாக திகழ்கின்றன.
தோரண வாயில் அமைப்புகள்...
ஜாலாவார் நகரத்தின் சிறப்பான சுற்றுலா அம்சங்களில் இந்த புத்த குகைக்கோயில்கள் மற்றும் ஸ்தூபிகள் போன்றனவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கற்காலத்துக்கே நம்மை இழுக்கும் மாயசக்தி வீசும் இந்த குகைக்கோயில்கள் கொல்வி எனும் கிராமத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
...
1912ம் ஆண்டில் பவானி சிங் எனும் மன்னரால் இந்த பிருத்வி விலாஸ் பேலஸ் எனும் மாளிகை கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் அந்த ராஜ வம்சத்தின் வாரிசுகளே இங்கு வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நுழைவாயில்கள் வழியாக இந்த அரண்மனை மாளிகையில் நுழையலாம். இங்கு...
ஜாலாவார் கோட்டைக்கு அருகிலேயே இந்த பவானி நாட்டியஷாலா அமைந்துள்ளது. 1921ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கலையரங்கம் பல உன்னதமான கலைப்படைப்புகள் மற்றும் நாடகங்களை கண்டுள்ளது. தனித்தன்மையான ‘நிலத்தடி’ அரங்க அமைப்பினை இது கொண்டுள்ளது.
குதிரைகளும்...
ஜாலாவார் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த ஜாலரா பட்டண் எனும் நகரம் அமைந்துள்ளது. இதன் விசேஷமான அம்சம் என்னவெனில் இந்த நகரம் முழுக்கவே ஒரு கோட்டைச்சுவரால் சூழப்பட்டிருப்பதாகும்.
விக்கிரமாதித்திய மஹாராஜாவின் புதல்வராகிய பர்மாரா சந்திர சேன் இந்த நகரை...
ககுனி எனும் இந்த சிறு நகரம் பர்வாண் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது ஜாலாவார் நகரத்திலிருந்து 65கி.மீ தூரத்தில் உள்ளது. இடிபாடுகளுடன் காணப்படும் ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்கள் இந்த ஸ்தலத்தின் முக்கிய அம்சங்களாகும்.
கணேஷ்க்கடவுளின் முழு உருவச்சிலை மற்றும்...
ஜாலாவார் அரசு அருங்காட்சியகம் 1915ம் ஆண்டிலேயே தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அரிதான நூற்பிரதிகள், அழகைய சிற்பங்கள், பழமையான நாணயங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தின் பிரதான சேகரிப்புகளாகும்.
இவை தவிர 5ம் நூற்றாண்டு மற்றும் 7ம்...
17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த அதிஷய் ஜெயின் கோயில்கள் புகழ்பெற்ற ஜெயின் கோயில்களாக அறியபடுகின்றன. இவை ஜாலாவார் நகரத்திலிருந்து 34 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன.
பழமையான கலையம்சங்களுடன் அற்புதமான தோற்றத்துடன் இந்தக்கோயில்கள் காட்சியளிக்கின்றன. 6 அடி...
சாப்பி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தல்ஹான்பூர் ஜாலாவார் நகரத்திலிருந்து 54 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயில்களில் கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ள தூண்கள், சிருங்கார சிற்பங்கள் மற்றும் தோரண வேலைப்பாடுகள் ஆகியவை காணப்படுகின்றன.
தற்சமயம்...
ஜாலாவார் நகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் இந்த மனோஹர் தாணா கோட்டை அமைந்துள்ளது. ‘அழகான காவற்கோட்டை’ என்பதே இந்த பெயரின் பொருள். பர்வண் மற்றும் காளிக்காட் ஆறுகள் ஒன்று சேருமிடத்தை நோக்கியவாறு இந்த கோட்டை அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு...
ஜாலாவார் நகரத்திலிருந்து 140 கி.மீ தூரத்தில் இந்த கங்காதர் கோட்டை அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் காணப்படும் புராதனமான பாறைக்கல்வெட்டு குறிப்பு ஒரு முக்கிய அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. பயணிகள் இந்த கோட்டைக்கு அருகிலுள்ள பல கோயில்களுக்கும் விஜயம் செய்யலாம்.