ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜின்ட் மாநகரம் அதன் செயற்கைக் கோள் நகரங்கள் மற்றும் கிராமங்களுடன், மிகவும் பழமையான இடங்களைக் கொண்டுள்ள பகுதியாக உள்ளது. இந்நகரங்களின் பெயர்கள் மற்றும் தோற்றங்களைப் பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த மாவட்டம் இந்துக்களின் பழமையான புனிதத்தலங்கள், கலாச்சார மையங்கள், மதத்தலங்கள், தலைவர்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை மட்டும் கொண்டிருக்காமல், முஸ்லீம் தலங்களையும் கொண்டுள்ள இடமாகவே உள்ளது. இவற்றில் ஒன்றாகவே நார்வானா தாலுகாவில் உள்ள ஹஸ்ரத் கையிபியின் கல்லறை உள்ளது.
புகழ் பெற்ற சூஃபி ஞானியான ஹஸ்ரத் கையிபி சாஹிப்பின் கல்லறையைக் கொண்டுள்ள இடமாக இது உள்ளது. இவர் தீவிரமான மதநம்பிக்கையும் மற்றும் புனிதமும் கொண்ட மனிதராவார்.
தேய்வீக சக்திகளை கொண்டிருக்கும் சூஃபி ஞானிகளில் ஹஸ்ரத் கையிபி சாஹிப்பும் விதிவிலக்கல்ல. அவர் பூமிக்குள் ஆச்சரியப்படும் வகையில் சென்று மறைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கல்லறையைச் சுற்றிலும் ஒரு அழகிய குளத்தில் பக்தர்கள் பிரார்த்தனைக்கு முன் தங்களுடைய கைகளை கழுவிச் செல்வது வழக்கம்.



Click it and Unblock the Notifications