ஜோத்பூரிலிருந்து 5கி.மீ தொலைவில் ரதனந்தா எனும் இடத்தில் இந்த கணேஷ் கோயில் அமைந்துள்ளது. விநாயகக்கடவுளுக்காக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புராணக்கதைகளின்படி ஒரு குரு இங்குள்ள ரதனந்தா மலையின்மீது 8 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட ஒரு சிலையை கண்டுள்ளார்.
அப்படி அந்த சிலையை அவர் பார்த்த இடத்தில் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகரை வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்களும் யாத்ரீகர்களும் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.