ஜோர்கட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மகோலு காட் உள்ளது. ராஜேஸ்வர் சின்ஹா என்ற அரசர் மணிப்புரி இளவரசியை மணந்த பின்னர் இந்த மகோலு அல்லது மணிப்புரிகளை கட்டினார்.
இந்த அரசர் மனைய்மாஜி கிராமத்தில் குரங்கநாயனி என்ற மணிப்புரி இளவரசியை மணந்தார். ஜோர்கட் நகரத்தின் மையத்தில் இருந்து 6 கிமீ தொலைவில் மகோலு காட் அமைந்துள்ளது.
அரசர் தன்னுடைய மனைவிக்காக என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதன் அடையாளமாக இந்த இடம் உள்ளது. இன்றைய நாட்களில் அழிந்த நிலையில் இருந்தாலும், இந்த இடத்தின் வரலாற்றையும், நினைவலைகளையும் சற்றும் குறையாமல் இந்த இடம் வைத்துள்ளது. மிகச்சரியான பெருமை மிக்க இடமாக இல்லாதிருந்தாலும், இந்த இடம் அழகான இடமாக இருக்கும்.
ஜோர்கட் நகரத்திலிருந்து 6 கிமீ தொலைவில் இருப்பதால் இவ்விடத்திற்கு வருவது மிகவும் எளிது. சுற்றுலாப் பயணிகள் பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் டாக்ஸிகளில் இந்த இடத்தை அடைந்திட முடியும்.
இந்த இடத்தைக் காண்பதில் உங்களுடைய முழு நாளும் செலவிடத் தேவையில்லை என்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாக சொல்லலாம்.



Click it and Unblock the Notifications