கடப்பா நகரில் சையது ஷா முகம்மது ஹுசைன் என்பவருக்காக கட்டப்பட்டிருக்கும் கம்பீரமான கல்லறை மாடத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவறவிட்டுவிடக் கூடாது.
இந்த கட்டிடம் வட்டவடிவில் மையத்தில் ஒரு பெரிய மண்டபத்தோடு காட்சியளிக்கிறது. அதோடு கட்டிடத்தை சுற்றி மிகப்பெரிய மதிற்சுவர்கள் பாதுகாப்புக்காக எழுப்பப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் சித்திர வேலைகள் நிரம்பிய இந்த மதிற்சுவர்களை போன்றே கட்டிடத்தின் உட்பகுதியும், வெளிப்பகுதியும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் நிஜாம்களின் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாகவும் சாந்த் பீரா கும்பாத் திகழ்ந்து வருகிறது.