வாமனமூர்த்தி கோயில் விஷ்ணு பகவானின் அவதாரமான வாமனனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள வெகு சில கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயில் தொன்மை வாய்ந்த கேரள கட்டிடக் கலைக்கு சாட்சியாக திருக்காக்கரா நகரில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
வாமனமூர்த்தி கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் 10 மற்றும் 13-ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்தவை. இந்தக் கோயிலில் ஓணம் திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்படும் என்பதால், அந்த சமயத்தில் கோயிலுக்கு வருவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
மேலும் வாமனமூர்த்தி கோயிலில் அன்னபூர்நேஸ்வரி மற்றும் விநாயகப் பெருமானுக்கும் சன்னதிகள் உள்ளன.