ஆதிசங்கராச்சாரியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள சிருங்கேரி மடம் பெரியார் நதியின் வடக்கு கரையில் அமைந்திருக்கிறது. இந்த மடத்தில் ஆதி சங்கரரின் தாயாருக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள கோயிலை தவிர பல்வேறு ஆலயங்கள் உள்ளன. இங்கு நடத்தப்படும் வேத வகுப்புகள் மற்றும் விவாதங்களில் ஏராளமான சமய அறிஞர்கள் கலந்து கொள்வார்கள்.
சிருங்கேரி மடத்தில் உள்ள பிரதான கோயில்கள் ஆதிசங்கரர், சாரதாம்பா அம்மன் மற்றும் விநாயக பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை. இந்த மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்படும்.