காலடியில் அமைந்திருக்கும் ராமகிருஷ்ண ஆஷ்ரமம், மேற்கு வங்கத்தில் சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட பேலூர் மடத்தின் கிளையாகும். அதோடு இங்கு பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண கோயிலிலிருந்து வடித்து கொண்டுவரப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சிலை ஒன்றும் உள்ளது. இந்த ஆஷ்ரமத்தின் பிரார்த்தனை கூடம் மிகவும் பெரிதாக விசாலமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ராமகிருஷ்ண ஆஷ்ரமத்தில் பிரம்மனந்தோயம் என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இது தவிர அறக்கட்டளை ஒன்றும், ஒரு நூலகமும் இங்கு செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆஷ்ரமம் பசுமையான இயற்கை சூழலில் அமைந்திருப்பதால் தனிமையின் ஏகாந்தத்தை சுகித்தவாறு அருகாமை பகுதிகளுக்கு நடை பயணம் செல்வது அலாதியான அனுபவமாக இருக்கும்.