காலடி கிராமத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கல்லில் தேவி கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜைன கோயிலாகும். 28 ஏக்ரா பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பாறைக்குடைவு கோயிலை அடைய நீங்கள் கல்லில் செதுக்கப்பட்ட 120 படிகளை ஏறிக் கடக்க வேண்டும். இந்தக் கோயில் ஜைன மதத்தின் மீது ஈடுபாடு கொண்ட பிசாரடி என்ற பிராமணப் பிரிவை சேர்ந்த கல்லில் பிசாரடி எனும் குடும்பத்தாருக்கு சொந்தமானது.
கல்லில் தேவி கோயிலில் முதன்மை தெய்வமான துர்கா தேவியை தவிர, மகாவீரர், பர்ஷவநாத், பத்மாதேவி, பிரம்மா போன்ற தெய்வங்களுக்கும் சிலைகள் உள்ளன. இங்கு பொதுவாக இரவு வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுவதில்லை. மாறாக மதியத்துக்கு முன்பாகவே பூஜைகள் முடிவடைந்துவிடும். அதன் பிறகு கோயில் நடை சாத்தப்பட்டுவிடும்.
கல்லில் தேவி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 8 நாட்கள் வெகு விமரிசையாக ஆண்டுத் திருவிழா கொண்டாடப்படும். அப்போது தெய்வ விக்ரகங்கள் பெண் யானைகள் மீது பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.