பாஸ்பா நதிக்கரையில் அமைந்துள்ள முதன்மையான கிராமமான பாட்ஸேரிக்கு இங்குள்ள ஓடையின் மீது கட்டப்பட்டுள்ள பழங்கால பாலத்தில் நடந்து செல்வதன் மூலமே அடைய முடியும். மரக்கழிகளை குறுக்கும் நெடுக்குமாக வைத்து பின்னல் போன்ற அமைப்புகளில் உருவாக்கப்பட்டது தான் இந்த பாலம்.
தனிச்சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள், தைத்து வைக்கப்பட்டவை போன்றை பாதைகள் மற்றும் பத்ரி நாராயணர் கோவில் ஆகியவை இங்குள்ள முக்கிய பார்வையிடங்கள் ஆகும்.
கிராமத்தின் நுழைவாயிலில் காணப்படும் ஸ்தூபி அல்லது சோர்ட்டன் என்றழைக்கப்படும் அமைப்பு, இந்த கிராமத்தை பகைவர்களிடமிருந்து காக்கும் என கிராமவாசிகள் நம்புகின்றனர்.
'கத்குன்டி' அல்லது 'கத்குனி' என்ற பெயரில் விளங்கும் பாரம்பரியமிக்க கட்டிடக்கலையை, கலைகளை விரும்பும் சுற்றுலாப்பயணிகள் இங்கே அனுபவித்திட முடியும். மரக்கற்களில், மரத்தாலான கழிகள் குறுக்கு வாட்டத்தில் சொருகப்பட்டு உருவாக்கப்படும் இந்த கட்டிடக்கலை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும்.
இந்த கட்டிடக்கலைகளில், செங்குத்தான பகுதிகளுக்கு இடமில்லை. இந்த கிராமத்திற்கு வெகு அருகில் புத்தருக்கான கோவில் ஒன்றும் உள்ளது.



Click it and Unblock the Notifications