புல்பணியிலிருந்து 155 கி.மீ தூரத்தில் இந்த பெல்கார் எனும் சுற்றுலாத்தலம் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2555 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.
உயர்ந்தோங்கிய மலைகள், அடர்த்தியான காடுகள் மற்றும் வித்தியாசமான காட்டுயிர் அம்சங்கள் போன்றவற்றை கொண்டுள்ள இந்த எழிற்பிரதேசத்தில் ‘குடியா கண்டா’ எனும் பழங்குடி இனத்தவர் வசிக்கின்றனர்.
இந்த பெல்கார் சரணாலயத்தில் அருகி வரும் பல விலங்குகளையும் பார்க்க முடியும். இவற்றில் வெள்ளைத்தந்த யானைகளை குறிப்பிடத்தக்க விலங்கினமாக சொல்லலாம்.
இந்த காட்டின் நடுவே வனத்துறைக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் ஒன்றும் உள்ளது. இந்த மாளிகையில் சூரிய சக்தியில் இயங்கும் விளக்கு அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
மேலும், பெல்கார் வனப்பகுதியின் ஒரு அங்கமான உஷாப்தி பள்ளத்தாக்கு பகுதியில் ஏராளமான மயில்களையும் பார்த்து ரசிக்கலாம். இவை தவிர இங்கு வசிக்கும் பழங்குடி இனத்தவர் உருவாக்கும் மூங்கில் கைவினை பொருட்களும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கின்றன.
கோட்டாகர் சரணாலயம் எனும் மற்றொரு வனப்பகுதியும் இந்த பெல்கார் சரணாலயத்தை ஒட்டியே அமைந்திருக்கிறது. இங்கு புலி, காட்டெருமை, சம்பார் மான், புள்ளி மான், காட்டுமயில், சிவப்பு காட்டுக்கோழி மற்றும் பல்வேறு ஊர்வன உயிரிகள் வசிக்கின்றன.