ஆத்தங்குடி கிராமம், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி நகரிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. செட்டிநாடு பகுதியில் உள்ள இக்கிராமம், கையால் செய்யப்படும் செம்மண் ஓடுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது; ஏனெனில், இவ்வகை ஓடுகள் இங்கு மட்டுமே செய்யப்படுகின்றன.
இவ்வோடுகள், சிமின்ட், மணல், ஸிந்தட்டிக் ஆஃஸைடுகள் மற்றும் பெல்லி ஜெல்லி ஆகியவற்றை உபயோகித்து செய்யப்படுகின்றன. இந்த ஓடுகள், முதலில் வடிவமைக்கப்பட்டு, வெயிலில் காய வைக்கப்பட்டு, பின் கண் கவர் கலை வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
இவ்வேலைப்பாடுகள் தான் இவ்வோடுகளுக்கு, அதன் தனிச்சிறப்பான கட்டமைப்பைக் கொடுக்கிறது. இவ்வேலைப்பாடுகளோடு, பல வித வண்ணங்களும் இவற்றின் அழகைக் கூட்ட உபயோகப்படுத்தப்படுகின்றன.
மக்கள், அவர்கள் வீடுகள் மற்றும் புல்தரைகளுக்குத் தக்கவாறு, ஓடுகள் செய்யச் சொல்லியும் வாங்கிப் போகின்றனர். விலங்கினங்கள் மற்றும் செடிகள் வரையப்பட்டுள்ள, புல்தரைகளுக்காகவே பிரத்யேகமாக தயாராகும் ஓடுகள் மிகப் பிரபலமானவையாகும்.
நீங்கள் உங்கள் சுவர்களின் மற்றும் திண்டுகளின் வண்ணங்களுக்குப் பொருத்தமான வண்ணங்களிலும் இவ்வோடுகளைத் தேர்வு செய்யலாம்.
ஆத்தங்குடி மக்கள் தங்கள் வீடுகளை மேலும் அழகுபடுத்திக் காட்ட, இவ்வோடுகளை பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக, பரம்பரை பரம்பரையாக உபயோகிக்கப்பட்டு வரும் வீடுகளில் இவ்வகை ஓடுகளைக் காணலாம்.



Click it and Unblock the Notifications