மதுரையில் உள்ள குன்றக்குடி முருகன் கோயில், முருகப் பெருமானுக்கும் அவரது இருதுணைவியரான வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருக்காக எழுப்பப்பட்டுள்ள, சிறு குன்றின் மேல் அமைந்த கோயிலாகும்.
இக்கோயிலின் தனிப்பெருமை என்னவெனில், முருகப் பெருமானின் திருவுருவச் சிலை, ஆறு முகங்களைக் கொண்டு “சண்முகம்” என்ற பெயரில் வழங்கப்பட்டு வருவதாகும்.
இக்கோயிலைக் காண நீங்கள் மலையேறும் வழியில், கணேசருக்கு மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோயிலைக் காணலாம். கணேசர் கோயிலுக்கு அடுத்ததாக முருகனுக்கு அமைந்த ஒரு கோயிலையும் காணலாம். இக்கோயிலில், முருக பெருமான், பழநி முருகன் வடிவில் வழிபடப்படுகிறார்.