பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாநிலத்தின் பழம்பெரும் குகைக் கோயில்களுள் ஒன்றான இது, காரைக்குடி மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இரு ஊர்களுக்கும் இடையில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டியில் உள்ளது.
இக்கோயிலின் சுவர்களில் உள்ள குறிப்புகள், இக்கோயில் 1091 மற்றும் 1238 ஏ.டி. க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று உணர்த்துகின்றன.
உலகளவில் பிரபலமான இக்குகைக் கோயிலில், பல்வேறு தெய்வங்களின் வடிவங்கள், பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. எனினும், இது மூலவராக உள்ள “கற்பக விநாயகர்” என்றழைக்கப்படும் கணேசருக்கு, அர்ப்பணிக்கப்பட்டதாகும்.
மலையிலிருந்து செதுக்கப்பட்டுள்ள பிள்ளையார்பட்டி கணேசர் சிலை, சுமார் 6 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இச்சிலை, வழக்கத்தில் இருந்து மாறுபட்டு, வலப்புறமாக தும்பிக்கை உடையதாக அரிய தோற்றத்தில் காணப்படுகிறது. இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.
அதனால், இங்கு, ‘விநாயக சதுர்த்தி’ என்றும் அழைக்கப்படும் கணேஷ் சதுர்த்தி, மிகுந்த பக்தியோடும், விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது, இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து, பக்திப் பரவசத்தோடு, பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
விநாயக சதுர்த்தி கொண்டாடப்படும் இச்சமயத்திலேயே, இங்கு தேர்த்திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications