இந்த கர்னாலா பறவைகள் சரணாலயம் இயற்கையின் சொர்க்கம் என்றே பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. புராதனமான கர்னாலா கோட்டையின் அடியில் அமைந்துள்ள இந்த சரணாலயம் 1968ம் ஆண்டில் உருவாக்கப்பட்டு பல வகை அரிய பறவைகள் வசிக்கும் அற்புத ஸ்தலமாக உள்ளது.
பறவை ரசிகர்கள் இங்கு 150 வகையான வசிப்பிட பறவை வகைகளையும், 37 வகையான புகலிடப் பறவைகளையும் கண்டு ரசிக்கலாம்.
புள்ளி மரங்கொத்தி, ஆஷி மினிமெட், பாரடைஸ் ஃப்ளை காட்சர், ரெட் வென்டட் புல்புல், மாக்பை ராபின் மற்றும் துடுப்பு வால் டிராங்கோ போன்ற அரிய பறவைகள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன. மைனா மற்றும் ஆந்தையையும் இங்கு பார்க்கலாம்.
சுற்றுப்புறப்பசுமையுடனும் இயற்கை எழிலுடனும் காட்சியளிக்கும் இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். மனதை சாந்தப்படுத்தி முகத்தில் முறுவலை வரவழைக்கும் சக்தியை இந்த ஸ்தலம் கொண்டுள்ளது.