கார்வாருக்கு நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு கோட்டையான இந்த ‘கோட் சிவேஷ்வர்’ பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. பிஜாப்பூர் சுல்தான்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை சிவேஷ்வர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி இந்தக் கோட்டை கனரா பிரதேசத்தின் (கர்நாடகத்தின் கடலோர பிரதேசம்) வட எல்லையை பாதுகாப்பதற்காக கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் தற்சயம் இந்தக் கோட்டை இடிபாடடைந்து காணப்படுகிறது.
இதன் கிழக்கு வாயிலுக்கருகில் ஒரு சுரங்கப்பாதை, ஒரு கிணறு மற்றும் ஒரு இஸ்லாமிய கல்லறைத்தளம் போன்றவற்றை இந்த கோட்டை வளாகத்தில் பார்க்க முடிகிறது.