கார்வாரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் காளி ஆற்றங்கரையில் இந்த பிரசித்தமான சுற்றுலா ஸ்தலமான சதாஷிவ்காட் அமைந்துள்ளது. 200 அடி உயரத்தில் மலை அமைந்துள்ள இந்த கோட்டையை 1698 ன் ஆண்டு ராஜா சொண்டே கட்டியுள்ளார்.
1715 ம் ஆண்டு பசவலிங்கராஜ் இந்த கோட்டைக்கு தன் தந்தையின் பெயரான சதாஷிவ்லிங்கராஜ் பெயரை நினைவுறுத்தும் விதமாக சதாஷிவ்காட் என்று பெயரிட்டுள்ளார்.சதாஷிவ்காட் கோட்டையில் புகழ் பெற்ற துர்கா தேவி கோயில் உள்ளது. இங்குள்ள கரிமுதின் கௌஸ் ஜிலானி தர்க்காவும் பார்க்க வேண்டிய இடமாகும். இந்த கோட்டை போர்த்துகீசியர்கள், மராத்தாக்கள், ஆங்கிலேயர் போன்ற பல ஆட்சியாளர்களின் உரிமைக்குள் இருந்துள்ளது.
இந்த கோட்டையிலிருந்து பார்க்கும்போது கீழே உள்ள கிராமம், காளி ஆற்றுப்பாலம் மற்றும் காளி ஆறு கடலில் கலக்கும் இடம் போன்றவை மிக அழகாக தெரிகின்றன. இருப்பினும் தற்சமயம் இந்தக்கோட்டை சிதிலமடைந்தே காணப்படுகிறது.
1783ல் கிழக்கிந்திய கம்பெனியின் தளபதி ஜெனரல் மாத்யூஸ் என்பவரால் இது சிதைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications