கண்டோலா மடாலயம் என்றும் அறியப்படும் குரு மண்டல் மடாலயம், கீலாங்கிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு புகழ்பெற்ற வழிபாட்டுத்தலம். லாஹால் மாவட்டத்தின் மிகப்பழமையான மடாலயமாக கருதப்படும் இந்த கோம்பா, குரு பத்மசாம்பவரால் 8-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந்த மடத்தின் முக்கிய அம்சமாக கருதப்படும் சிலைகள் மரத்தால் செய்யப்பட்டவையாகும்.
பிரமிட் வகைக்கூரைகளோடு அழகிய செதுக்கப்பட்ட வேலைப்பாடுகளுடனும் தனித்துவம் மிக்க கட்டடக்கலை பாணியுடனும் இம்மடாலயம் விளங்குகிறது. இம்மடாலயத்தின் மோசமான நிலை காரணமாக, பெரும்பாலான சிலைகள் துப்சிலிங்க் கிராமத்திலுள்ள வேறு ஒரு மடாலயத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ளன.
புத்தரின் கருணையை உள்ளடக்கி இருக்கும் போதிசத்வா எனப்படும் அவலோகிதேஸ்வராவின் சேதமடைந்த பளிங்கு தலையை உடைய இம்மடாலயம் சந்திரா மற்றும் பாகா நதிக்கரையில் அமைந்துள்ளது.
இம்மடாலயத்தின் வரலாறு 2-ஆம் நூற்றாண்டின் நாகார்ஜுனாவிற்கு முந்தைய காலமாகும். கருங்கல்லாலான காளி சிலை ஒன்று இங்குள்ள மண்டபத்தில் இருப்பது, இம்மடாலயம் முன்பு ஒரு கோயிலாக இருந்ததை குறிக்கிறது.



Click it and Unblock the Notifications