ஹிமாச்சல பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கிராமமான தண்டி கீலாங்கில் உள்ளது. 2573 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் கீலாங்கின் அண்மையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சந்திரா மற்றும் பாகா நதிகள் இணையும் பகுதியின் மேலே அமைந்துள்ளது.
வருவாய் மற்றும் தீர்வு பதிவேடுகளின் படி சண்டி என்ற பெயரின் கீழ் இவ்விடம் ராஜா ராணா சந்த் ராம் என்பவரால் நிறுவப்பட்டது. இவ்விடம் பல்வேறு புராணக் கதைகளோடு தொடர்புடையது.
அவற்றில் ஒரு புராணக்கதையின்படி, புராணப்பாத்திரங்களான சந்திரக்கடவுளின் மகனான சந்திராவும், சூரியக்கடவுளின் மகளான பாகாவும் ஒருவரையொருவர் விரும்பினர். பழங்கதைப்படி அவர்கள் இருவரும் ஓடிப்போய் இவ்விடத்தில் திருமணம் செய்து கொண்டனர். கீலாங்கின் வடக்கே செல்ல விரும்பும் பயணிகளின் கடைசி எரிபொருள் நிலையமாக , மனாலி-லே சாலையில் அமைந்துள்ள தண்டி விளங்குகிறது.