கொச்சி மண்டலத்தின் கீழ் வரும் பகுதிகளில் இந்த வெலிங்டன் தீவும் ஒன்றாகும். இது கொச்சி ஏரியின் மீதே செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தீவுப்பகுதியாகும். ஏரியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணைக்கொண்டு பெரும் முயற்சியில் இத்தீவு எழுப்பப்பட்டுள்ளது.
கொச்சியின் பிரதான துறைமுக ஸ்தலமும் இதுவேயாகும். இந்தியக் கடற்படையின் கொச்சித்தளமானது இத்தீவின் கணிசமான பகுதியை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. 1936ம் ஆண்டில் வேம்பநாட் ஏரியில் இந்த தீவு முதல் முதலில் உருவாக்கப்பட்டு புதிய கொச்சி துறைமுகமாக நிர்மாணிக்கப்பட்டது.
வெல்லிங்டன் ஐலேண்ட் பகுதியில் பல பிரபலமான சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. ரம்மியமான இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள தாஜ் மலபார் ஹோட்டல் கடற்கரை வரை நீளும் ஒரு வித்தியாசமான நீச்சல் குளத்தையும் பெற்றுள்ளது.