இரண்டு நாடுகள் மற்றும் இரண்டு வேறுபட்ட நாகரிகங்களுக்கு இடையேயான ஒற்றுமை போன்றவற்றின் அடையாளமாக ‘இந்தோ-போர்த்துகீசிய மியூசியம்’ அமைந்துள்ளது. கொச்சியை ஒரு உலகப்புகழ் பெற்ற துறைமுக நகரமாக மாற்றியதில் போர்த்துகீசியர்களின் பங்கை விளக்கும் விதத்திலும் இது காட்சியளிக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தில் பலவிதமான வரலாற்றுகால அரும்பொருட்கள், ஆவணங்கள் மற்றும் இதர வரலாற்று சேகரிப்புகளையும் பார்க்கலாம். இவை கொச்சி நகரத்துடன் போர்த்துகீசிய வணிகர்கள் கொண்டிருந்த வலிமையான வாணிபப்போக்குவரத்து மற்றும் தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றன.
டாக்டர். குரீத்ரா எனும் கொச்சி பிஷப் ஒருவரின் முயற்சியில் இந்த மியூசியம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கிடையே அக்காலத்திலேயே நிலவிய ஒற்றுமையை வெளிச்சப்படுத்தும் நோக்கத்துடன் இந்த மியூசியம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எப்படியெல்லாம் இருவேறுபட்ட மனித நாகரிகங்கள் சமாதான அணுகுமுறையுடன் ஒரே காலத்தில் வளரமுடியும் என்பதை இந்த மியூசியத்துக்கு விஜயம் செய்தால் புரிந்துகொள்ளலாம். தேக்கு மரத்தில் குடையப்பட்ட கலையம்சம் கொண்ட சிற்பங்களையும் இந்த மியூசியத்தில் பார்க்கலாம்.