'நீங்கள் வீட்டுக்கு செல்லும் போது, நாங்கள் சொன்னதை அவர்களிடம் சொல்லுங்கள்: 'உங்களுடைய எதிர்காலத்திற்காக, நாங்கள் எங்களுடைய நிகழ்காலத்தை கொடுத்துள்ளோம்' என்று'.
கோஹிமா போர்க் கல்லறைகள் இருக்கும் இடத்தின் நுழைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ள இந்த எழுத்துக்கள் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு உண்மையிலேயே செலுத்தப்படும் மரியாதையாகும்.
இந்த கல்லறையின் முக்கியமான அம்சமாக கோஹிமா போரில் உயிர் நீத்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள 1421 கற்களாலான மேடையை சொல்லலாம்; இது ஆசியாவில் நடந்த இரண்டாம் உலகப்போரின் காட்சிகளில் மிகவும் ஆக்ரோஷமான பகுதியாகும். இங்கிருக்கும் ஒவ்வொரு கல்லறையிலும் ஒரு பித்தளை பட்டையும், அதில் பொருத்தமான வாசகங்களும் இடம் பெற்றிருக்கும்.
காமன்வெல்த் போர்க் கல்லறைகள் ஆணையத்தால் பாராமரிக்கப் பட்டு வரும இந்த கல்லறைகள் காரிஸன் மலை என்றழைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளன.
இங்கிலாந்து மற்றும் கனடாவில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் இந்த போரில் உயிர் நீத்த மாவீரர்களின் கல்லறைகளை பார்வையிட புனிதப் பயணம் செய்து வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications