இந்த மூகாம்பிகா கோயில் கொலப்புர ஆதி மஹாலட்சுமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது கொல்லூரின் பிரதான சுற்றுலா அம்சமாகும். இந்த கோயில் அடர்த்தியான கானகத்தின் நடுவில் மலைகள் பின்னணியில் உயர்ந்தோங்கி நிற்கும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது.
புராதன ஹிந்து பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் ஒரு கட்டிடக்கலை அதிசயமாக இந்த கோயில் காணப்படுகிறது.இந்த கோயிலில் சக்தியின் அடையாளமாக ஒரு ஜோதிர்மயா லிங்கம் நடுவில் தங்கக்கோட்டுடன் காணப்படுகிறது. இந்த லிங்கம் மூன்று கண்களைக்கொண்ட மூகாம்பிகா தேவி சிலைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் ஒரு சித்தி ஷேத்திரத்தையும் கொண்டுள்ளது. இதன் பின்னால் பல புராணிக கதைகள் சொல்லப்படுகின்றன. நவராத்திரியின்போது இங்கு சரஸ்வதி பூஜா விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் ஏராளமான பக்தர்கள் இங்கு விஜயம் செய்கின்றனர்.மலர்களால் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் மூகாம்பிகா கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் லிங்கத்தையும் தேவியையும் தரிசிக்கும் முன் திரு முழுக்காடி பின் வணங்குகின்றனர்.