ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் NH-7-ல் மலைக்குன்றுகளின் மீது அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் யாராலும் சென்று அறியப்படாதவையாகும்.
இங்கு எழுப்பப்பட்டுள்ள வானியல் கவனிப்பு மையம் மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவை வழிபாடு மட்டுமல்லாமல் பொழுதுபோக்கிற்காகவும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களாக உள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஒசூர் வழியாக வேறு இடங்களுக்கு செல்பவர்களாக இருப்பார்கள். இந்த கோவிலின் அமைவிடமும், அருகிலுள்ள எழில் கொஞ்சும் பூங்காவும் இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகளின் வண்டிகளை நிறுத்திச் செல்ல ஏற்ற தாக்கத்தை தருகின்றன.
இந்த கோவில் அமைந்துள்ள உயரத்திலிருந்து ஒசூர் நகரத்தின் சுற்றுவட்டக் காட்சியையும் காண முடியும். இங்கிருக்கும் வானியல் கவனிப்பு மையத்திலிருந்து நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளி கற்களின் பயணங்களையும் காண முடியும்.
இந்த கவனிப்பு மையமும், கோவிலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத உண்மைகளை தரும் இடங்களாக உள்ளன. வானியல் கவனிப்பு மையத்தில் அறிவியல் மற்றும் வானியல் ரீதியிலான உண்மைகளின் அடிப்படையிலான கணிப்புகளும், கோவிலில் ஜோதிடம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான கணிப்புகளும் நமக்கு கிடைக்கின்றன. உங்களுடைய நம்பிக்கை எதுவாக இருந்தாலும் அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரரின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.