தொரபள்ளியில் இருக்கும் ராஜாஜி நினைவிடம் தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் பிறந்து (10 டிசம்பர் 1878 முதல் 1925 வரை) தனது 11-ம் வயது வரை வாழ்ந்த இடமாகும்.
சி.ராஜகோபாலாச்சாரி அல்லது ராஜாஜி என்று அழைக்கப்படும் இவர், புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர் மற்றும் திறமையான தலைவரும் ஆவார்.
சி.ராஜகோபாலாச்சாரி தமிழ் நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்லாமல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், இந்திய யூனியனின் உள்துறை அமைச்சராகவும், மேற்கு வங்காளத்தின் கவர்னராகவும் மற்றும் சென்னை பிரசிடென்சியின் முதல்வராகவும் இருந்திருக்கிறார்.
இந்தியாவின் முதல் வைசிராயாகவும், கடைசி கவர்னர்-ஜெனரலுமாக இருந்தவர் சி.ராஜகோபாலாச்சாரியார் ஆவார். 'சேலத்தின் மாம்பழம்' என்று பாசத்துடன் அழைக்கப்படும் ராஜாஜி, இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதையும் பெற்ற உயர்ந்த மனிதராவார்.
ராஜாஜி தான் வகித்த அனைத்து பதவிகளிலும் மிகுந்த நேர்மையுடன் நடந்து கொண்டதற்காக நினைவு கூறப்பட்டவர்.இன்றும் பொருந்தும் வகையிலான இவரது வாழ்க்கை எண்ணற்ற பாடங்களை இளைஞர்களுக்கு வழங்கி வருகிறது.
இவரது உடமைகள் மற்றும் வாழ்க்கைக் கதையைத் தாங்கி நிற்கும் இந்த நினைவிடம் அவரின் பெருமையை பறைசாற்றி நிற்கிறது. ராஜாஜி இறந்த பின்னரும் அவருடைய இலட்சியங்கள் மற்றும் கொள்கைளை இந்த இடம் இன்றும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.