காக்கும் கடவுளாகிய விஷ்ணுவின் சகோதரியான புவனேஷ்வரிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஜகன்னாதி தேவி கோயில் 1500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1800 மீ உயரத்தில் உள்ள இந்த கோயிலை ஒன்றரை மணி நேர மலையேற்றத்துக்கு பின் சென்றடையலாம்.
பெண் சக்தியின் வடிவமான துர்கா தேவியின் உருவங்கள் இந்த ஜகன்னாதி தேவி கோயிலின் சுவர்களில் காணப்படுகின்றன. இந்த கோயிலில் வீற்றிருக்கும் கடவுளின் சிலை கட்டி மற்றும் ராஜஸ்தானிய நாட்டுப்புற கலையம்சங்களுடன் காட்சியளிக்கிறது.
பிரசித்தமாக வழங்கிவரும் நாட்டுப்புற கதையின்படி ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் தனது புல்லாங்குழல் இசைக்கு நடனமாடிய இரண்டு பெண்களை பார்த்ததாகவும் அவர்களில் ஒரு பெண்ணை அந்த சிறுவன் பிடித்து இழுத்தபோது அவள் ஒரு தெய்வம் வடிவம் என்பது புலப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அன்று முதல் அந்த பெண் தெய்வம் இந்த பெக்லி எனும் கிராமத்தில் கோயில் கொண்டு உறைவதாக அக்கதை முடிகிறது.



Click it and Unblock the Notifications