சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் சிவபெருமான் சோமேஸ்வரர் என்னும் வடிவிலும், சொக்கேஸ்வரர் என்னும் பெயரில் வழிபடப்படுகிறார்.
அம்பாளின் பெயர் சோமசுந்தரி ஆகும். பொற்றமரைக்குளத்தின் கிழக்குப் புறமாகக் கோவிலுக்குள் எளிதாக வரமுடியும். சாரங்கபாணி ஆலயத்தின் தெற்குப் புறம் உள்ள சாலையிலிருந்தும் கோவிலுக்குள் எளிதாக வரலாம்.
இந்து புராணங்களின்படி, அமிர்த கலசம் உடைந்தபொழுது அக்கலசத்திலிருந்து ஒரு துளி வெளிப்பட்டு வளையவடிவில், இங்கு சிதறியதாம். அவ்வாறு சிந்திய அத்துளி விழுந்த இடத்தில்தான் தற்போதுள்ள சோமேஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளதாம்.
இக்கோவிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13 ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டனர்.
உண்மையில் இக்கோவில் கட்டப்பட்டது சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது இக்கோவில். பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.



Click it and Unblock the Notifications