ஸ்ரீ விட்டல ருக்மணி சமஸ்தானமானது 1998 ஆம் ஆண்டில், கும்பகோணத்தில், ராமஸ்ரீ விட்டல்தாஸ் ஜெயகிருஷ்ண தீட்சிதரால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பைத் தோற்றுவிக்கக் காரணம் மக்களிடையே பக்தியைப் பற்றிய அக்கறையை வளர்ப்பதும், நாமசங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தினை உணரவைப்பதும் ஆகும். ஏனெனில் இவர்களது நம்பிக்கையின்படி, நாமசங்கீர்த்தனமே முக்தி அடைய சிறந்த வழி எனக் கருதப்படுகிறது.
இந்நோக்கத்தினை அடையும் வண்ணம் ஸ்ரீவிட்டல் மஹாராஜ் என்பவர் ஸ்ரீ விட்டல ருக்மணி சமஸ்தானத்தினை கோவிந்தபுரம் என்னும் புனிதத்தலத்தில் நிறுவினார். கும்பகோணத்திலிருந்து ஆடுதுறை செல்லும் சாலையில் கும்பகோணத்திலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது.
ஸ்ரீ பகவான் நாம போதேந்திர சரஸ்வதி என்னும் மகான் சமாதியடைந்த இடம் கோவிந்தபுரம் கோவிந்தபுரம் ஆகும். அவரது சமாதிக்கு வருகைபுரியும் மக்கள் அம்மகானின் பிரசன்னத்தை உணரமுடியும்.
நீங்கள் மிகக் கவனமாக மிக உண்ணிப்பாகக் கவனித்தால் அம்மகான் ராம நாமத்தை உச்சரிப்பதைக் கேட்கமுடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். அவரது குரல் மிகமென்மையாகத் தொடங்கி சற்று சத்தமாக ஒலித்து பின் மீண்டும் அமைதியாகிவிடுமாம்.
இந்த சிறப்பான காரணங்களால் இவ்விடத்தில் ஸ்ரீ விட்டல ருக்மணி சமஸ்தானத்தினை நிறுவ முடிவெடுக்கப்பட்டு இவ்விடம் தேர்வு செய்யப்பட்டதாம்.