ஜெனரல் சோராவர் கோட்டை, லே அரண்மனை மற்றும் நம்க்யால் செமோ மடத்தின் மேலே அமைந்துள்ளது. ரியாசி கோட்டை என்றும் அழைக்கப்படும் இந்த தொல்பழங்காலத்திய நினைவுக்கட்டிடம் இப்பொழுது பாழடைந்து கிடந்தாலும், ஒரு காலத்தில் ஜம்முவில் இருந்த டோக்ரா அரசாங்கத்தினர் தங்கள் செல்வத்தை பாதுகாக்க இந்த கோட்டையை பயன்படுத்தினர்.
சீன அரசாட்சியுடன் லடாக்கை மீட்க தொடர்ச்சியாக போராடிய ஜெனரல் சோராவர் சிங் என்ற முக்கியமான படை வீரரின் கோட்டை இது. பெரிய அளவிலான நாணய திரட்டல்கள் மற்றும் இன்றைய அஞ்சல் தலையின் பிரதிகளும் விலைமதிப்பில்லாத அக்காலத்து புதையல்களும் இப்போது இந்த கோட்டையில் வைக்கப்பட்டுள்ளது.
செனாப் நதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது இந்த கோட்டை. தொல்பொருள், தொல்பழங்காலத்திய கலை மற்றும் கலைப் பொருட்கள் மீது நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த கோட்டை பெரிய ஈர்ப்பாக அமையும். இந்த கோட்டைக்குள் ஒரு மசூதி, ஒரு இயற்கையான ஓடை, காளி மற்றும் துர்க்கை கடவுள்களை கொண்ட ஒரு கோவிலும் உள்ளது.
இந்த இடத்தை அடைய, பயணிகள் தங்கள் வண்டிகளை கோட்டையின் வாசல் வரை எடுத்துச் செல்லலாம். அல்லது லே நகர பஜாரிலிருந்து நடந்தும் செல்லலாம்.



Click it and Unblock the Notifications