குருத்வாரா ஆலம்கீர் சாஹிப் என்றும் வழங்கப்படும் இந்த இடம் லூதியானாவில் இருந்து 29 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு தங்கியிருந்த குரு கோவிந்த் சிங் இங்கு நீரில்லாததை அறிந்து ஒரு அம்பை எய்ய, அது விழுந்த இடத்தில் ஒரு ஊற்று தோன்றியதாக நம்பப்படுகிறது.
தற்சமயம் தீர்சார் என வழங்கப்படும் நீர்த் தொட்டியாக உள்ளது. வயதான பெண் ஒருவருக்கு குஷ்டநோய் வர, அவரை இந்தக் குளத்தில் குளிக்கச் சொன்னபின் அவருக்கு நோய் நீங்கியதாகவும் நம்பப்படுகிறது.