உத்திரபிரதேச மாநிலம் மஹொபா மாவட்டத்தில் உள்ள கோக்ஹர் மலை, பண்டா நகரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும், மஹொபாவில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கோக்ஹர் பர்வதம் இந்த பிராந்தியத்தில் உள்ள மிகப் பிரபலமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகும்.
இந்த மலைத்தொடர்கள் அற்புதமான கருங்கல் பாறைகளையும், கண்ணுக்கினிய அருவிகள் மற்றும் கண்கவர் குகைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. இங்குள்ள குகைகள் ஒரு காலத்தில் குரு கோரக்நாத் மற்றும் அவருடைய சீடர்களுக்கு உறைவிடமாக திகழ்ந்தது.
மிகப் பிரபலமான கக்ரமாத் கோவில் கோக்ஹர் பர்வதத்தில் தான் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் குறிப்பாக இந்து மதத்தின் நாத் பிரிவை சேர்ந்த பக்தர்களை கவர்கிறது.
இந்த மலை, மலை ஏறுபவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. இங்கு இந்து மதம், சமண மதம் மற்றும் புத்த மதங்களை சார்ந்த கோவில்கள் பரவலாக உள்ளன.
இங்கு அமைந்துள்ள பிரபல சுற்றுலா தளங்களாவன: பாரி சந்திரிகா தேவி கோவில், சூரஜ் குர்ட், மற்றும் கத்தீஸ்வரில் உள்ள சிவன் கோவில், மற்றும் ராம் குர்ட் ஆகியன.
இங்குள்ள வெற்றிலை ஆராய்ச்சி மையம் மற்றுமொரு சுற்றுலா மையமாக விளங்குகிறது. இது NBRI லக்னோவின் கிளை ஆகும். இது ச்ஹ்ஹத்ரபுர் சாலையில் அமைந்துள்ளது



Click it and Unblock the Notifications