கேரளாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன அணையாக கருதப்படும் மலம்புழா அணை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த அணை பாலக்காடு நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
மலம்புழா அணையுடன் சேர்ந்து ஒரு கேளிக்கை பூங்காவும், அற்புதமான தோட்டம் ஒன்றும் அதன் பகுதிகளாக அறியப்படுகின்றன. அதோடு மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையும், நீர்த்தேக்கமும் இப்பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகின்றன.
இங்கு நீர் மின்சார திட்டம் 1955-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த அணையுடன் சிறிது காலத்திற்கு பிறகுதான் சேர்க்கப்பட்டன. அவற்றில் படகுப் பயணம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பிரபலம்.
மேலும் மலம்புழா அணைக்கு நீங்கள் வரும் போது அணையின் அருகாமையில் அமைந்திருக்கும் மலம்புழா கார்டனுக்கு கண்டிப்பாக சென்று வர வேண்டும்.



Click it and Unblock the Notifications