மலம்புழா நகருக்கு சுற்றுலா வரும்போது நீங்கள் கண்டிப்பாக திரெட் கார்டனை தவற விட்டு விடக்கூடாது. இது மற்ற தோட்டங்களை போல் அல்லாமல் இங்கு உள்ள செடிகளும், பூக்களும் கயிற்றை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அதுவும் இந்த செடிகளும், மலர்களும் இயந்திர உதவி இல்லாமல், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் இரவு பகல் பாராத கடின உழைப்பினால் வெறும் கைகளை கொண்டே தயாரிக்கப்பட்ட அற்புத கலைப்படைப்புகள். அதற்கு ஒரே உன்னத சாட்சியாகவும், அழகான அதிசயமாகவும் திரெட் கார்டன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
திரெட் கார்டன் முழுக்க முழுக்க அந்தோணி ஜோசப் என்பவரின் திட்டப்படி உருவாக்கப்பட்டது. இங்கு பல்வேறு வகையான மலர்களும், செடியினங்களும் ஒரு கண்ணாடி அறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதோடு உண்மையின் பிம்பங்களாக காட்சிதரும் இந்த செயற்கை அற்புதங்கள் பார்வையாளர்களுக்கு சிறிது காலம் நிஜ உலகிலிருந்து சொர்க்க லோகத்தில் சஞ்சரிப்பது போன்ற ஒரு பிரம்மையை உண்டாக்கி விடும்.



Click it and Unblock the Notifications