மலப்புரம் மாவட்டத்தில் அழகிய சிறு சிறு தீவுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாப் பகுதி. இந்த பறவைகள் சரணாலயம் கடலுண்டி எனும் எழில் கொஞ்சும் குக்கிராமத்தில், கடலுண்டி ஆறு அரபிக் கடலோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது.
கடலுண்டி சரணாலயம் கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டர் உயரத்தில், பிரம்மாண்ட குன்றுகள் சூழ அமையப்பெற்றிருப்பது பறவை காதலர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். இந்த சரணாலயம் ஏராளமான புலம்பெயர் பறவையினங்களுக்கு பருவ கால வசிப்பிடமாக இருந்து வருகிறது.
இங்கு மலபார் இருவாய்க்குருவி, சதுப்பு நிலக் கொக்கு, கடற்பறவை, மரங்கொத்தி, மீன்கொத்தி, பிராமினி பருந்து, விம்ப்ரேல், டார்டர், சாண்ட்பைப்பர் போன்ற பறவையினங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம். இவைதவிர இந்த சரணாலயத்தில் மீன், ஆமை, நண்டு உள்ளிட்ட கடல் வாழ் பிராணிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடலுண்டி சரணாலயத்துக்கு அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும். இந்தக் காலங்களில் நீங்கள் இங்கு வந்தால் பறவைகளை ரசிப்பதோடு படகுப் பயணம் சென்றும் பொழுதை கழிக்கலாம்.