மணாலியில் உள்ள புத்த மார்க்கத்தினருக்காக 1960ம் ஆண்டில் இந்த பிரசித்தமான ஆன்மீகத்தலம் கட்டப்பட்டுள்ளது. இந்த கொம்பா எனும் மடாலயத்துக்கு ஸ்பிட்டி, லடாக், கின்னௌர், லாஹௌல், திபெத் மற்றும் நேபாள் போன்ற பகுதிகளிலிருந்து பௌத்த யாத்ரீகர்கள் விஜயம் செய்கின்றனர். இதில் உள்ள சுவர் ஓவியங்கள், ஸ்தூபங்கள் மற்றும் பிரம்மாண்ட புத்தர் சிலை போன்றவை யாத்ரீகர்களை பெரிதும் கவர்கின்றன.