மண்டி பிரதேசத்தில் ஒரு முக்கியமான ஆன்மிகத்தலமாக பியாஸ் ஆற்றின் கரையில் உள்ள இந்த பீமா காளி கோயில் புகழ் பெற்றுள்ளது. மண்டியை ஆண்ட புஷாஹர் அரசவம்சத்தினரின் குலதெய்வமான பீமாகாளிக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த கோயிலில் உள்ள அருங்காட்சியகத்தில் பல ஹிந்து கடவுளர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. வழங்கிவரும் புராணக்கதையின்படி கிருஷ்ணபஹவான் பாணாசுரன் எனும் அசுரனுடன் கடுமையாக போரிட்டு வென்று அவனது தலையை இந்த ஸ்தலத்தில் புதைத்ததாக சொல்லப்படுகிறது.
யாதவ அரசர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலிலிருந்து ஷீகண்ட் மலையின் சிகரத்தை நன்றாக பார்த்து ரசிக்கலாம். ஒவ்வொரு வருடமும் காளி பூஜாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications