மயிலாடுதுறையின் குறுங்கை சிவன் கோவிலில் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணை திறந்தபடி காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் தான் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்ததாக சொல்லப்படுகிறது.
சிவபெருமான் கோபமாக பார்க்கும் போது, அவருடைய பார்வையில் படும் அனைத்தும் எரிந்துவிடும். சிவபெருமான் உடலின் முக்கிய அம்சமாக பார்க்கப்படும் நெற்றிக்கண்ணை எல்லோரும் பயம் மற்றும் மரியாதை கலந்த பக்தியுடன் வணங்கி வருகின்றனர்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணைப் பற்றி மகாபாரதத்திலும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு முறை பார்வதி தேவி சிவபெருமானின் பின்னாலிருந்து அவருடைய கண்களை மூடி விட்டார். அப்போது கடவுளின் கண்கள் மூடப்பட்டிருந்ததால் உலகமும் இருண்டு விட்டது.
அப்பொழுது தான், சிவனின் நெற்றியிலிருந்து ஒரு கண் தோன்றி அதிலிருந்து கிளம்பிய ஒளி உலகைக் காக்கத் தொடங்கியதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. உண்மையில் இந்த மூன்றாவது கண் எப்பொழுதும் நெற்றிக்குள்ளேயே இருக்கும், அது வெளிப்படும் போது அழிவு நிச்சயம்.
சிவபெருமானின் கோபத்தால் தான் காமத்தின் கடவுளான மன்மதன் சாம்பலானார். திரிநேத்ரா, திரியம்பகா, திரியக்ஷா மற்றும் திரிநாயனா என்று அழைக்கப்படும் சிவபெருமானின் மூன்றாவது கண் பற்றி பேசும் இந்த கோவில், சிவபெருமானின் அளவற்ற சக்திகளை காட்டுவதாக உள்ளது.