Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மயிலாடுதுறை » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில்

ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை

15

மயிலாடுதுறையில் உள்ள 'பெரிய கோவிலாக' ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் உள்ளது. மாயூரத்தின் கணவர் என்ற பொருளுடைய 'மாயூரநாதசுவாமி' இக்கோவிலின் முதன்மை கடவுளாவார்.

ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானின் சாபத்திற்குள்ளாகி பெண்மயிலாக பிறந்திருந்தார். அவர் மாயூரா என்ற அவதாரத்தில் பிறந்து இந்த கோவிலில் சிவபெருமானை வணங்கி, பூஜித்து வந்தார்.

இந்த கோவிலில் சிவலிங்கத்தை வணங்கியபடி உள்ள சிலையைப் பார்ப்பவர்களுக்கு இந்த கதை சொல்லாமலே புரியும்! இந்த கோவில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன.

அதன் ஆரம்ப கட்டுமானத்திற்குப் பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோவில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் உள்ளது. இக்கோவிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும்.

இந்த திருவிழாவை, சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழா நடக்கும் வேளைகளில் மகா சிவராத்திரியையொட்டி சப்தஸ்வரங்கள் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. இவ்வளவு பழமையான இடத்தில், நடத்தப்படும் பழமையான நாட்டிய திருவிழா காண்பவரின் கண்களுக்கு அற்புதமான விருந்தினைப் படைக்கத் தவறுவதில்லை!

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun