காவிரி நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வதனீஸ்வரர் கோவில் பரவலாக வள்ளலார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கான இந்த கோவிலுடன் ஒரு புராண கதையும் தொடர்பு பெற்றுள்ளது.
ஒரு முறை சிவபெருமானின் முதல்வரான நந்தி தேவர் தன்னுடைய வலிமையைப் பற்றி கர்வப்பட்டார். அவருக்கு பாடம் புகட்ட நினைத்த சிவபெருமான் அவரது தலையில் ஒரு முடியை வைத்து விட்டார்.
இந்த முடியின் எடை தாங்க முடியாமல் திண்டாடிய நந்தி தேவர் தனது தவறை உணர்ந்தார். இந்த மேதா தட்சிணாமூர்த்தி கோவிலில் உள்ள சிலை நந்தி தேவரின் மேல் யோகாசனம் செய்யும் நிலையில் ஒருவர் அமர்ந்திருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையின் வலது கை ஞான முத்திரையையும், இடது கை ஒரு புத்தகத்தை ஏந்தியபடியும் உள்ளது. இந்த கோவிலின் வரலாறு நீங்கலாக, இதன் சுற்றுப்புறமும் பார்வையாளர்களை கவரும் எழிலுடையதாக உள்ளது.
வாரி வழங்கும் கொடையுள்ளமுடைய வள்ளலார் என்றழைக்கப்படும் ஸ்ரீ வதனீஸ்வரர் உள்ள ரிஷப மண்டபத்தில், அவருடன் ஞானாம்பிகையும் உள்ளார். இந்த கோவில் வளாகத்தில் இருந்தவாறு தெரியும் காவிரி நதியின் இயற்கையழகு பார்ப்பவர்களுக்கு இயற்கையின் மீது மரியாதையை அதிகப்படுத்தும்.