மயிலாடுதுறையில் ஒரு மாதம் முழுவதும் நடத்தப்படும் பண்டிகைதான் துலா உற்சவமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி (அக்டோபர்-நவம்பர்) மாதத்தில் நடக்கும் இந்த பண்டிகை ஆயிரமல்ல, இலட்சக்கணக்கான பக்தர்களை மயிலாடுதுறையை நோக்கி வரச் செய்யும் வல்லமை பெற்றதாகும்.
வட இந்தியாவில் நடக்கும் கும்பமேளா திருவிழாவைப் போன்றே தென்னிந்தியாவின் மயிலாடுதுறையில் காவிரி நதியின் கலையில் நடத்தப்படும் இத்திருவிழா பக்தர்களை பெருமளவில் வரச் செய்யும்.
ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படும் கடைமுகம் வேறந்த திருவிழாவையும் விட மிகச் சிறப்பானது. புனித நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகியவை இந்நாளில் காவிரி நதிக்கு வந்து நீராடி தங்களில் கரைந்துள்ள பாவங்களை நீக்கி விட்டு, புத்துணர்வு பெற்று வரும் காலங்களில் தங்களிடம் நீராடும் பக்தர்களின் பாவங்களை ஏற்றுக் கொள்ள தயாராவதாக நம்பப்படுகிறது.
நான்கு புண்ணிய நதிகள் ஒன்றாக கூடுவதாக நம்பக்கூடிய இந்நாளில காவிரியில் நீராடுவது மிகவும் புண்ணியமானது என்று சொல்லப்படுகிறது. அதே போல, ஐப்பசி மாதம் முடிவதற்கு ஒரு நாளிருக்கும் போது நடத்தப்படும் தேர்த் திருவிழா மயிலாடுதுறை வீதிகளை ஆட்சி செலுத்துவதாக இருக்கும்.
இந்த தேர் திருவிழாவிற்காகவே பிரத்தியேகமாக அலங்காரம் செய்யப்பட்ட வள்ளலார் கோவில், மயூரநாதசுவாமி கோவில் மற்றும் இரங்கநாத சுவாமி கோவில் சுவாமிகள் இப்பண்டிகையின் சிறப்பம்சமாகும்.