கூரைநாட்டில் எழுந்தருளியுள்ள புனுகீஸ்வரர் கோவிலின் முதன்மை கடவுளாக சிவபெருமானும், அவரது துணைவியாராக சாந்த நாயகி அம்மையும் உள்ளனர். இந்த இடத்தில் மோட்சமடைந்த புனுகு சித்தரின் பெயரால் இவ்விடம் இப்பெயரைப் பெற்றது.
மயிலாடுதுறை மாஹாங்கால் போன்ற நூல்கள் இப்பகுதியை சுற்றிலும் வாழ்ந்து வந்த சித்தர்கள் மற்றும் முனிவர்களைப் பற்றி எடுத்துச் சொல்கின்றன. முற்காலத்தில் அதிகளவில் சித்தர்கள் வசித்து வந்த ஒரு கிராமம் இன்றும் கூட மயிலாடுதுறையில் சித்தர்காடு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தை போலவே, கோவில்களுக்காக மட்டுமல்லாமல், ஜவுளிகளுக்கும் பெயர் பெற்ற இடமாக கூரைநாடு உள்ளது. காஞ்சிபுரம் எப்படி பட்டுச் சேலைகளுக்குப் புகழ் பெற்று விளங்குகிறதோ, அதேபோல கூரைநாடும் அங்கு ஒரே அளவில் இணைப்புகள் எதுவுமில்லாமல் இரட்டையடுக்குகளில் நெய்யப்படும் ஒன்பது முழ சோலைகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
தமிழில் கூரை என்றால் உடை என்று பெயர் வந்ததற்கு காரணமாக கூரைநாடு என்ற பெயர் இருப்பதிலிருந்தே இவ்விடத்தின் புகழை உணர முடியும்.
கூரைநாட்டில் இருந்த நெசவாளர்கள் பஞ்சத்தால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த போது, இங்கு வசித்த பிராமணர்கள் தங்கள் வீட்டில் நடந்த ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு சேலையை வாங்கியதால், நெசவாளர்கள் ஓரளவு வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டதாக நம்பப்படுகிறது.
எனவே தான், பெரும்பாலான ஐயர் திருமணங்களில் கூரைப்பட்டு புடவை பயன்படுத்துவது இன்றும் வழக்கமாக இருக்கிறது.