தென்டு இனமக்களின் ஆட்சியாளர்கள் ஆன்க்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர். ஆன்க்ஸ் ஆட்சியாளர்களின் தலைவராக வாங்கோ ஆன்க் கருதப்படுகிறார்.
ஏராளமான ஆபரனங்கள் அணிந்து மிகவும் கம்பீரமாக நிற்கும் வாங்கோ ஆன்க் அவர்களின் சிலை, சுய் கிராமத்தில் இருக்கும் மிகப் பெரிய வீடான ஆன்க் வீட்டின் முன்பு நிறுவப்பட்டுள்ளது. சுய் கிராமம் கன்யாக் மக்களின் வீரத்திற்கும், போர் புரிதலுக்கும் எடுத்துக்காட்டான பகுதியாக அமைந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் இந்த சுய் கிராமத்திற்கு சென்றால் கன்யாக் மக்களின் போர் வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். ஒரு காலத்தில் மனிதத் தலைகளை வெட்டும் பழக்கத்தைக் கொண்டிருந்த இந்த கன்யாக் மக்களின் அந்த பழைய எச்சங்கள் சுய் கிராமத்தில் காணப்படுகின்றன.
சுய் கிராமத்தில் இருக்கும் ஆன்க்ஸ் வீட்டிற்குள் அவர்களுடைய எதிரிகளின் மண்டை ஓட்டுக்களை அடுக்கி வைத்திருக்கின்றனர். இதிலிருந்தே அவர்கள் எந்த அளவிற்கு போரில் நாட்டமுடையவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சுய் கிராமம் மான் பகுதிக்கு வெகு அருகில் உள்ளது. சுற்றுலா டாக்ஸிகள் மூலம் மிக எளிதாக இந்த கிராமத்திற்கு செல்லலாம். இயற்கை அழகும், வரலாற்று சிறப்பும் கொண்ட இந்த சுய் கிராமத்திற்கு சென்று வந்தால் நாகலாந்து மாநிலத்தின் கலாச்சாரத்தை அறிந்து வரலாம்.



Click it and Unblock the Notifications