லோங்வா கிராமம் இரு நாடுகளின் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது இந்த கிராமத்தின் பாதி பகுதி இந்திய எல்லைக்குள்ளும் மீதி பாதி பகுதி மியான்மர் நாட்டின் பகுதிக்குள்ளும் அமைந்துள்ளன.
லோங்வா கிராமம் இன்னும் ஆங்க் தலைவர் மற்றும் இந்த கிராம சபையின் சேர்மன் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கன்யாக் மக்களின் பாரம்பரியம் கூறுகிறது. தலைமை ஆங்க் 6 மனைவிகளைக் கொண்டிருக்கிறார்.
லோங்வா கிராமத்தில் வாழும் மக்கள் இரட்டைக் குடியுரிமைகளை, அதாவது இந்தியாவின் குடியுரிமையையும் மற்றும் மியான்மர் நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளனர்.
லோங்வா கிராமம் முழுவதும் கன்யாக் இன மக்களே வசித்து வருகின்றனர். கன்யாக் மக்கள் மனிதத் தலைகளைக் கொய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதால் இந்த கிராமத்தில் ஏராளமான மண்டை ஓடுகளைப் பார்க்க முடியும்.
மேலும் மான் மாவட்டத்தின் ஒரு பெரிய கிராமமாக லோங்வா விளங்குகிறது. இங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா பயணிகளுக்காக 3 அறைகள் கொண்ட ஒரு விடுதியைக் கட்டியிருக்கின்றனர். லோங்வா கிராமத்திற்கு சென்றால் இந்த விடுதியில் தங்கலாம்.