மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள ராஜ்மச்சி எனும் சிறு கிராமத்தில் இந்த பிரசித்தமான ஆச்சால்கர் எனும் கோட்டை அமைந்துள்ளது. மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திற்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இந்த ஆன்மீக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைக்கு தவறாமல் விஜயம் செய்கின்றனர். ஆதியில் பர்மாரா ராஜவம்சத்தினரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை பின்னர் 1452ம் ஆண்டில் மேவார் மன்னர் ராணா கும்பாவால் புதுப்பித்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஆச்சால்கர் கோட்டை வளாகத்தில் ஆச்சால்கரேஷ்வர் ஹமதேவ் கோயிலும் அமைந்துள்ளது. இது சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள கோயிலாகும். இக்கோயிலிலுள்ள ஒரு தெய்வீகப்பாறையில் சிவனின் பாதச்சுவடுகள் பதிந்துள்ளதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது. வெண்கலத்தால் ஆன ஒரு பெரிய நந்தி சிலை மற்றும் மூன்று பெரிய எருமைச்சிலைகள் ஆகியவற்றையும் இங்கு பார்க்கலாம்.
சிவன் கோயிலைத் தவிர்த்து மூன்று ஜெயின் கோயில்களும் இந்த கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளதால் ஒரு முக்கியமான ஆன்மிகக் கேந்திரமாகவும் ஆச்சால்கர் கோட்டை பிரசித்தி பெற்றுள்ளது.
இது ஹனுமான்போல் மற்றும் சம்பாபோல் எனும் இரண்டு பிரதான நுழைவாயில்களைக் கொண்டுள்ளது. குடிமக்களை எதிரிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.