சாமுண்டி மலைகள் கடல் மட்ட்த்திலிருந்து சுமார் 1065 அடிகள் உயரத்தில் உள்ளன. மைசூர் நகருக்கு வருகை தரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது. இந்த சாமுண்டி மலையின் உச்சியில் பார்வதி தேவியின் அவதாரமான சாமூண்டீஸ்வரி அம்மனின் கோயில் அமைந்துள்ளது.
இந்த தெய்வம் உடையார் ராஜ வம்சத்தினரின் குல தெய்வமாகும். 11 ஆம் நூற்றான்டில் கட்டப்பட்ட இந்த கோயில் 1827 ஆம் ஆண்டு மைசூர் மன்னர்களால் புதுப்பிக்க பட்டதாக வரலாறு கூறுகிறது.
கோயில் எதிரில் அசுர வம்ச மன்னனான மகிஷாசுரனின் பிரம்மாண்ட சிலை அமைந்துள்ளது.சாமுண்டி மலையில் மற்றொரு குறிப்பிடத் தக்க அம்சம் இங்கு அமைந்துள்ள நந்தி சிலை ஆகும். 5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட சிலை ஒரே ஒரு கருப்பு சலவைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது இதன் விசேஷமாகும்.
இந்த மலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் ஹனுமானுக்குமான ஒரு சிறிய கோயில் அமைந்துள்ளது. இது காலஇ 7.30 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலும், அதன் பின்னர் மதியம் 3.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலும் பக்தர்களுக்கு திறந்து விடப்படுகிறது.
சாமுண்டி மலை உச்சியிலிருந்து கீழே பார்த்தால் சுற்றுலாப்பயணிகளுக்கு மைசூர் நகரம் முழுவதும் காட்சிக்கு தெரியும் என்பது சாமுண்டி மலையின் மற்றொரு சிறப்பம்சம்.



Click it and Unblock the Notifications