இக்கோவில் நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்வாய்ந்த கோவில் ஆகும். இங்கு விஷ்ணுவின் அவதாரமான சௌந்தர்யராஜ பெருமாள் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள விக்கிரகங்கள் தங்கம் மற்றும் மரகதத்தால் இழைக்கப்பட்டுள்ளன.
ஆதிசேஷ சுவாமியின் சிலை, நாகதேவதைகளின் சிலைகள், மற்றும் பல தெய்வங்களின் சிலைகள் இக்கோவில் வளாகத்தில் காணப்படுகின்றன. இக்கோவிலின் வாயிலில் 70 அடி உயரமுள்ள இராஜ கோபுரமும், நான்கு தூண்களுடைய மண்டபமும் மிடுக்காக காட்சியளிக்கின்றன.
இங்குள்ள சௌந்தர்யபுஷ்கரணி என்னும் புனித நீரூற்று மற்றும் வசந்த மண்டபமும், இக்கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. இதன் வரலாற்றுச் சிறப்பும், கோவில் கட்டிடக்கலையும், மிக சிறப்பாகக் கருதப்படுகிறது. பெருமாள் பக்தர்கள் யாவரும் கண்டிப்பாக தரிசிக்கவேண்டிய கோவில் இது.



Click it and Unblock the Notifications