நாக்பூர் பகுதியில் உள்ள புத்த மத்த்தை சேர்ந்தவர்களுக்கு தீக்ஷா பூமி ஒரு புனித ஸ்தலமாகும். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர். இங்கு 120 அடி நீளமுள்ள புத்த ஸ்தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுடன் பல நூற்றுக்கணக்கான தலித் மக்கள் புத்த மதத்திற்கு மாறிய சம்பவத்தின் நினைவுச்சின்ன இடமாக கருதப்படுகிறது. அந்த நாள் அஷோக் விஜய தசமி என்ற நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த புண்ணிய ஸ்தலத்தில் ஒரே சமயம் 5000 பேர் கூடும் அளவுக்கு இடவசதி உள்ளது. கம்பீரமான இந்த நினைவுச்சின்னம் வரலாற்றின் குறிப்பிடத்தக்க அம்சமாகவும் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும் பெயர் பெற்று விளங்குகிறது.